உள்நாட்டு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

புதிய ஆளுநர்கள் நியமனம் – ஜனாதிபதி அதிரடி

பதவி விலகிய மேல் மாகாண ஆளுநர் ஆசாத் சாலி மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லா ஆகியோருக்கு பதிலாக புதிய ஆளுநர்கள் நியமிக்கப்படவுள்ளனர்.

புதிய ஆளுநர்கள் இன்று மாலை அல்லது நாளை நியமிக்கப்பட வாய்ப்புக்கள் இருப்பதாக ஜனாதிபதிக்கு நெருக்கமான செய்திகள் தெரிவிக்கின்றன.

பல்வேறு சர்ச்சைக்கு மத்தியில் தமது பதவி விலகல் கடிதத்தை ஆளுநர்கள் ஜனாதிபதியிடம் கையளித்திருந்தனர்.

இதனையடுத்து, ஜனாதிபதி கடிதத்தை ஏற்றுக்கொண்டுள்ள நிலையில், புதிய ஆளுநர்களை நியமிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

கருத்து தெரிவிக்க