உள்நாட்டு செய்திகள்புதியவை

முஸ்லிம் அமைச்சர்கள் பதவி விலகினர்!

அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் அமைச்சர்கள் அனைவரும் தமது பதவி விலகல் கடிதத்தை இன்னும் சற்று நேரத்தில் கையளிக்கவுள்ளனர்.

அமைச்சரவை அந்தஸ்து உள்ள, அந்தஸ்து அற்ற அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், பிரதி அமைச்சர்களே இவ்வாறு பதவி விலகுகின்றனர்.

தமது பதவி விலகல் கடிதத்தை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் இவர்கள் இன்று மாலை 3.00 மணியளவில் கையளிக்கவுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தெரியவருகிறது.

இதேவேளை, முஸ்லிம் மக்களின் உரிமைகளையும் பாதுகாப்பையும் அரசாங்கம் உறுதிப்படுத்தத் தவறினால் அனைத்து முஸ்லிம் அமைச்சர்கள் பிரதியமைச்சர்கள் இராஜாங்க அமைச்சர்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்து விட்டு தனிக் குழுவாக செயற்பட தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் தற்போதைய சூழ்நிலை மற்றும் முஸ்லிம்களின் பாதுகாப்பு தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம். பௌஸியின் இல்லத்தில் இன்று முற்பகல் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த கலந்துரையாடலின் பின்னர் இவ்வாறு தீர்மானிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க