புதியவைவடக்கு செய்திகள்

யாழ்ப்பாணத்தில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்ட பிரதமர் ரணில்!

யாழ்ப்பாணத்தில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்ளும் முகமாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று யாழ்ப்பாணத்திற்கு விஐயமொன்றை மேற்கொண்டுள்ளார்.

கடும்பாதுகாப்புக்கு மத்தியில் காலை 10 மணியளவில் யாழ்ப்பாணம் கொழும்புத்துறை கெலன் தோட்டம் பகுதியில் அமைக்கப்பட்ட புதிய வீடுகளை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கையளித்தார்.

அதனையடுத்து, இந்த வீட்டு திட்டத்திற்கான பெயர்பலகையை திரையாக்கம் செய்து வைத்ததுடன் வீடுகளையும் நாடா வெட்டி திறந்து வைத்து வீட்டு உபகரணங்களையும் பயனாளிகளுக்கு வழங்கி வைத்தார்.

அத்துடன், யாழ்ப்பாணம் முற்றவெளியில் புதிதாக தெரிவு செய்யப்பட்ட 23 ஆயிரத்து 11 பேர்களில் ஆரம்ப கட்டமாக 4,500 பேருக்கான சமுர்த்தி நிவாரண உரித்து வழங்கும் நிகழ்விலும் கலந்து கொண்டார்.

இந்த நிகழ்வுகளில் அமைச்சர்களான மங்கள சமரவீர, ராஜித சேனாரத்ன . தயா கமகே, இராஜாங்க அமைச்சர் விஐயகலா மகேஸ்வரன் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா , தர்மலிங்கம் சித்தார்த்தர் உள்ளிட்ட அரசியல்வாதிகள் அரச அதிகாரிகள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

கருத்து தெரிவிக்க