புதியவைவெளிநாட்டு செய்திகள்

ஜனாதிபதி தேர்தலில் மீண்டும் போட்டியிட தயார் – ட்ரம்ப்

இரண்டாவது முறையாகவும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

போட்டியிடுவது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவித்தலை எதிர்வரும் 18 ஆம் திகதி வெளியிட உள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “நான் இரண்டாவது முறையாக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதை ப்ளோரிடா மாநிலத்தின் ஒர்லாண்டோவில் ஜூன் 18-ஆம் திகதி அறிவிக்கிறேன். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க கூட்டத்தில் கலந்து கொள்ளுங்கள்” என அழைப்பு விடுத்துள்ளார்.

கடந்த தேர்தலில் ஜனாதிபதி ட்ரம்பின் தேர்தல் வெற்றியில் ஒர்லாண்டோ பகுதி முக்கிய பங்கு வகித்திருந்தது. இந்நிலையிலேயே அவர் மீண்டும் ஜனாதிபதி தேர்தல் அறிவிப்பை அப்பகுதியில் அதிகாரபூர்வமாக வெளியிட உள்ளார்.

கருத்து தெரிவிக்க