வெளிநாட்டு செய்திகள்

ஜப்பானில் தானியங்கி ரயில் விபத்து- 14 பேர் காயம்

ஜப்பான் டோக்கியோ பகுதியில் சாரதியின்றி இயங்கும் தானியங்கி ரயில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தினால் 14 பேர் காயமடைந்துள்ளனர் எனவும் ஆபத்தான விபத்தல்ல எனவும் அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

நேற்றிரவு தண்டவாளத்தில் சென்று கொண்டிருந்த குறித்த ரயிலானது தவறான பாதையில் சென்றுள்ளது. தண்டவாளம் முடியும் பகுதியில் ஏற்படுத்தப்பட்டிருந்த தடுப்பில் மோதியதில் விபத்து நேரிட்டுள்ளது என முதல்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

30 வருடகாலமாக சேவையில் இருக்கும் மேற்படி தானியங்கி ரயில் முதல் முறையாக விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க