உள்நாட்டு செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவை

மாத்தறை அக்குரஸ்ஸ துப்பாக்கி சூட்டு சந்தேகநபர் கொல்லப்பட்டார்.

மாத்தறை அக்குரஸ்ஸ பகுதியில் கடந்த 22 ஆம் திகதியன்று காவல்துறை உத்தியோகத்தர் ஒருவரை சுட்டுக்கொன்றவர், காவல்துறையின் துப்பாக்கி பிரயோகத்தில் பலியானார்.

இந்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.

சட்டவிரோத மதுபான உற்பத்தி தளத்தை முற்றுகையிட்டபோதே கடந்த 22 ஆம் திகதி காவல்துறை அலுவலர் சுட்டுக்கொல்லப்பட்டார்.

இந்தநிலையில் விசாரணையை மேற்கொண்டு வந்த காவல்துறையினர் அவரை கைதுசெய்ய முற்பட்டபோது இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்திலேயே அவர் பலியானதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

கருத்து தெரிவிக்க