உள்நாட்டு செய்திகள்புதியவை

அத்துரலியே ரத்ன தேரரின் உடல்நிலை பாதிப்பு – குவியும் மக்கள்

கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கு முன்னால் உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுத்து வரும் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரரின் உடல்நிலை பாதிக்கப்படலாமென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தொடர்ச்சியாக இன்று மூன்றாவது நாளாகவும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுவரும் நிலையில், இரண்டாவது நாளான நேற்று மாலை இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் ரிஷாட் மற்றும் ஆளுநர்களான அசாத் சாலி, ஹிஸ்புல்லாஹ் ஆகியோர் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்தப் போராட்டத்துக்கு பல்வேறு தரப்பினரும் தமது ஆதரவை வெளிப்படுத்தி வருதுடன், நேரடியாக சென்று அத்துரலியே ரத்ன தேரரையும் சந்தித்து வருகின்றனர்.

கருத்து தெரிவிக்க