உள்நாட்டு செய்திகள்புதியவைவெளிநாட்டு செய்திகள்

இந்திய அமைச்சர்களுக்குள் 22 பேருக்கு குற்றவழக்குகள்

இந்திய நாடாளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா, வெற்றி பெற்றதை தொடர்ந்து பதவியேற்றுள்ள அமைச்சரவையில், 22 பேர் மீது குற்ற வழக்குகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜனநாயக சீர்திருத்தத்திற்கான தேர்தல் கண்காணிப்பு சங்கம் என்ற ஆய்வு மையம் புதிய அமைச்சர்களின் தனிப்பட்ட விபரங்களை வெளியிட்டுள்ளது.

இதன்படி 56 அமைச்சர்களில் 51 பேர் கோடீஸ்வரர்கள்.

இவர்களது சராசரி சொத்து மதிப்பு ரூ.14.72 கோடி ஆகும்.

உள்துறை மந்திரி அமித்ஷா உள்பட 5 அமைச்சர்களின் சொத்து மதிப்பு மட்டும் ரூ.40 கோடிக்கு மேல் உள்ளது

பிரதாப் சந்திர சாரங்கி, ராமேஸ்வர் உள்ளிட்ட 5 அமைச்சர்கள்,ஒரு கோடிக்கும் குறைவான சொத்துமதிப்பையே கொண்டுள்ளனர்.

22 அமைச்சர்கள் மீது குற்ற வழக்குகள் உள்ளன.

இதில் 16 பேர் கொலை முயற்சி, சமூகங்களுக்கு இடையே பிரிவினையை தூண்டி விடுதல் உள்ளிட்ட கடுமையான வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்கள். கிரிராஜ் சிங், அஸ்வினி குமார் சவுபே உள்ளிட்ட 3 அமைச்சர்கள்; மீது கடுமையான குற்ற வழக்குகள் உள்ளன.

8 அமைச்சர்கள் 10–ம் வகுப்பு முதல் 12–ம் வகுப்பு வரை படித்துள்ளனர்.

கருத்து தெரிவிக்க