உள்நாட்டு செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

சமுர்தி கொடுப்பனவை வழங்க ரணில் யாழ்ப்பாணம் வந்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இன்று பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக கடும் பாதுகாப்புக்கு மத்தியில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க இன்று யாழ்ப்பாணத்திற்கு விஐயமொன்றை மேற்கொண்டார்.

கொழும்பிலிருந்து இன்று மாலை யாழ்ப்பாணத்திற்கு வந்த பிரதமர் தலைமையிலான அமைச்சர்கள் குழுவினருக்கு யாழ் கோட்டையில் வரவேற்பளிக்கப்பட்டது.


யாழில் நாளை ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காகவே பிரதமர் தலைமையிலான அமைச்சர்கள் குழுவொன்று இன்று சனிக்கிழமை யாழ்ப்பாணத்திற்கு வந்துள்ளது.

யாழ் மாவட்டத்தில் புதிதாக தெரிவு செய்யப்பட்ட சமுர்த்தி பயனாளிகளுக்கான கொடுப்பனவை வழங்கும் நிகழ்வு யாழ் மாநகர மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இதில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு கொடுப்பனவுகளை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வழங்கி வைக்க உள்ளார்.

கருத்து தெரிவிக்க