உள்நாட்டு செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

முல்லைத்தீவு அளம்பில் புனித அந்தோனியார் ஆலய புதிய கட்டட திறப்பு

முல்லைத்தீவு மாவட்டத்தின் அளம்பில் புனித அந்தோனியார் ஆலயத்தின்  புதிய கட்டட திறப்பு விழாஇன்று பலத்த  பாதுகாப்புக்கு மத்தியில் சிறப்புற இடம்பெற்றது

நாட்டில் இடம்பெற்ற யுத்தத்தில் பல்வேறு பாதிப்புக்களை சந்தித்த அளம்பில் புனித அந்தோணியார் ஆலயத்தில் புதிதாக கட்டடம் ஒன்று அமைக்கப்பட்டு இன்றைய தினம் காலை 8 மணியளவில் ஆலயத்திற்கு அமைக்கப்பட்ட புதிய கட்டடம் யாழ் ஆயர் வணக்கத்துக்குரிய    யஸ்ரின் B  ஞானப்பிரகாசம் அடிகளார் அவர்களால் திறந்துவைக்கப்பட்டது

கட்ட திறப்பு விழாவை தொடர்ந்து ஆலயத்தில் விசேட வழிபாடுகள் இடம்பெற்றன இந்த விசேட விழாவில் வன்னி மாவடட பாராளுமன்ற உறுப்பினர் திருமதி சாந்தி சிறிஸ்கந்தராஜா கரைதுறைப்பற்று பிரதேச சபை தவிசாளர் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் உள்ளுராட்ச்சி உதவி ஆணையாளர்கள் மதகுருமார்கள் ஆருட்சகோதரிகள் பொதுமக்களென பலரும் கலந்துகொண்டனர்

நிகழ்விற்கு பலத்த பொலிஸ் இராணுவ பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

கருத்து தெரிவிக்க