உள்நாட்டு செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

முஸ்லிம் அரசியல்வாதிகளால் தமிழ் மக்களின் வாக்குகளை வாங்க முடியாது: பிரபா

முஸ்லிம் அரசியல்வாதிகள் இனி ஒரு போதும் தமிழ் மக்களின் வாக்குகளை விலைகொடுத்து வாங்க முடியாது.

இந்தநிலையில்  அவர்களுடன் இருக்கும் ஓரிரு தமிழ் தரகர்களை மக்கள் இன்று அடையாளம் கண்டு துரத்தியடிக்க தயாராக உள்ளனரென ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் பிரதி அமைச்சருமான பிரபா கணேசன் தெரிவித்துள்ளார்.

முஸ்லிம் அரசியல்வாதிகள் தொடர்பாக ஜனாதிபதி மற்றும் பிரதமர் முன்னெடுத்து வரும் தற்போதைய நடவடிக்கைகள் குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

கடந்த இரண்டு வருட காலமாக ஜனாதிபதியின் செயல்பாடுகளையோ ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் நடவடிக்கைகளையோ வெளிக்கொண்டு வர முடியாமல் இருந்தேன்.

ஆனால் இன்று ஜனாதிபதியின் தவறுகளைப் பற்றியும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் நடவடிக்கை சம்பந்தமாகவும் வெளிப்படையாக பேசுவதறகான சந்தர்ப்பம் கிட்டியுள்ளதையிட்டு மகிழ்ச்சியடையும்

அதே சந்தரப்பத்தில் வன்னி மாவட்டத்திற்கான எனது அரசியல் நடவடிக்கைகளை மேலும் துரிதப்படுத்துவதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளேன் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்

கருத்து தெரிவிக்க