புதியவைவெளிநாட்டு செய்திகள்

விக்கி லீக்ஸ் நிறுவனருக்கு உளவியல் சித்திரவதை: ஐ.நா. தகவல்

விக்கி லீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ் ‘நீண்ட கால உளவியல் சித்திரவதைக்கு’ உட்படுத்தப்பட்டதாக பி.பி.சி செய்தி வெளியிட்டுள்ளது.

நில்ஸ் மெல்சர் எனும் ஐக்கிய நாடுகள் சபையின் வல்லுநர் ஒருவர் வெளியிட்டிருந்த கருத்தை மேற்கோள் காட்டி அந்த செய்தி வெளியிடப்பட்டிருந்தது.

உண்மையை வெளிக்கொண்டுவருதல் என்ற பெயரில் குறித்த சித்திரவதை முன்னெடுக்கப்பட்டிருந்ததாகவும் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துட்ன, ‘அசாஞ் இந்த விசாரணைக்கு தகுதியற்றவர். இதன் மூலம் அவரது மனித உரிமைகள் மீறப்படும் என்பதால், பிரிட்டன் அவரை நாடு கடத்த கூடாது.’ என்று நில்ஸ் மெல்சர் வலியுறுத்தியிருந்தார்.

இதற்கு பதிலளித்துள்ள பிரிட்டனின் வெளியுறத்துறை செயலாளர் ஜெர்மி ஹண்ட், ‘அசாஞ் நீதியின் பார்வையிலிருந்து மறைந்திருக்க விரும்பினார். பிரிட்டன் நீதிமன்றங்கள் மெல்சரின் குறுக்கீடு அல்லது குற்றச்சாட்டுக்கள் இல்லாமல் தங்கள் தீர்ப்பு குறித்து முடிவு செய்ய அனுமதிக்க வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.

கருத்து தெரிவிக்க