உள்நாட்டு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

தொடர் குண்டுத் தாக்குதல்களின் பின்னணியில் ஈரான்: பா.ஜ.க. உறுதி

இலங்கையில் கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி நடத்தப்பட்ட தொடர் குண்டுத் தாக்குதல்களின் பின்னணியில் ஈரான் உள்ளதாக பா.ஜ.க.வின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தகவல் வெளியிட்டுள்ளார்.

ஐ.எஸ்.ஐ.எஸ்.அமைப்பால் முன்னெடுக்கப்பட்ட இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்று 40 நாட்கள் கடந்துள்ள நிலையில், இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தெரிவித்துள்ள அவர், ‘இந்த தாக்குதல்கள் வசாபி சன்னி பிரிவினரால் நடத்தப்பட்டுள்ளது. இலங்கையிலுள்ள ஷியா கல்வி நிறுவனங்களுக்கு ஈரானே நிதியுதவி வழங்கி வருகிறது. இதன் மூலம் மதமாற்றம் இடம்பெறுவதாக தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது. ஆகையால். தொடர் குண்டுத் தாக்குதலின் பின்னணியில் ஈரான் இருப்பதற்கு வாய்ப்புள்ளது.’ என சுப்பிரமணியன் சுவாமி குறிப்பிட்டுள்ளார்.

கருத்து தெரிவிக்க