உள்நாட்டு செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவைவெளிநாட்டு செய்திகள்

ட்ரம்ப்புன் சந்திப்பு தோல்வி. 5 பேருக்கு மரணத்தண்டனை விதித்த வடகொரிய அதிபர்

அமரிக்க ஜனாதிபதி டிரம்ப் உடனான 2-வது சந்திப்பு தோல்வி அடைந்ததால் ஆத்திரம் அடைந்த வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன், இந்த சந்திப்புக்கு ஏற்பாடு செய்த 5 அதிகாரிகளுக்கு மரண தண்டனை அளித்தார்.

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் உடனான 2-வது சந்திப்பு தோல்வியடைந்த நிலையில், இந்த பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்த அமெரிக்காவுக்கான சிறப்பு தூதர் கிம் ஹியோக் சோல் மற்றும் வெளியுறவுத்துறையின் மூத்த அதிகாரிகள் 4 பேரை சுட்டுக்கொன்று மரண தண்டனை நிறைவேற்றியதாக தென்கொரியா பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

டிரம்ப் மற்றும் கிம் ஜாங் அன், கடந்த ஆண்டு ஜூன் மாதம் சிங்கப்பூரில் முதல்முறையாக சந்தித்து பேசினர்.

இந்த சந்திப்பு மிகவும் இணக்கமாக நடைபெற்றதால் இருநாட்டு உறவில் நீடித்த விரிசல் விலகியது. இதையடுத்து வடகொரியா ஏவுகணை சோதனைகளை நிறுத்திவிட்டு அமைதி பாதைக்கு திரும்பியது.

பின்னர்,இருவரும் கடந்த பிப்ரவரி மாத இறுதியில் வியட்நாமில் 2-வது முறையாக சந்தித்து பேசினர்.

ஆனால் இந்த சந்திப்பு முதல் சந்திப்பை போல இணக்கமாக நடைபெறவில்லை.
கிம் ஜாங் அன்னின் கோரிக்கையை ஏற்க மறுத்து, டிரம்ப் பேச்சுவார்த்தையில் இருந்து பாதியிலேயே வெளியேறினார்.

இது கிம் ஜாங் அன்னுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து, இந்த சந்திப்புக்கு ஏற்பாடுகளை செய்த சிறப்பு தூதர் கிம் ஹியோக் சோல் மற்றும் வெளியுறவுத்துறை அதிகாரிகள் 4 பேர் மீது நாட்டின் தலைவருக்கு துரோகம் செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டது.

விசாரணைக்கு பிறகு கடந்த மார்ச் மாதம் அவர்கள் 5 பேருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டதாக தென்கொரிய பத்திரிகை தெரிவித்துள்ளது.

கருத்து தெரிவிக்க