உள்நாட்டு செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு எதிராக முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம்

யாழ்ப்பாணம் முஸ்லிம் கல்லூரி வீதியும் – நாவலர் வீதியும் இணையும் புதுப்பள்ளிச் சந்தியில் வெள்ளிக்கிழமை ஆராதனையின் பின்னர் யாழ் முஸ்லீம் சமூகத்தினால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

யாழ்;ப்பாண முஸ்லிம் சமூகத்தினால் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பிற்கு எதிர்ப்புத்தெரிவிக்கும் வகையில் இந்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது.

இந்த ஆர்ப்படடத்தில் ஈடுபடடவர்கள் நாட்டில் தற்போது உருவாகியுள்ள ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதம் முற்றாக அழிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.

மேலும் நாட்டில் நடைபெற்ற குண்டு தாக்குதல்கள் சம்பவங்களுடன் தொடர்புடைய அனைவரும் சடடத்தின் முன் நிறுத்தப்பட்டு அவர்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் கோரினர்.

கருத்து தெரிவிக்க