உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

ஹிஸ்புல்லாவுக்கும் நாடாளுமன்ற குழுவின் அழைப்பாணை!

21/4 தாக்குதல் தொடர்பில் கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லாவிடமும் விசாரணை நடத்தவேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் கத்தோலிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் அடுத்த அமர்வுக்கு அவரை அழைத்து விசாரிக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரி கத்தோலிக்க எம்.பிக்களின் சார்பில், காவிந்த ஜயவர்தன சபாநாயகருக்கு கடிதம் அனுப்பியுள்ளார் .

21/ தாக்குதல் தொடர்பில் விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் அடுத்த அமர்வு ஜுன் 4 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

கருத்து தெரிவிக்க