உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

கருத்தடை குற்றச்சாட்டு: வைத்தியருக்கு எதிராக 377 முறைப்பாடுகள்

சிங்கள பௌத்த பெண்களுக்கு கருத்தடை சிகிச்சைகளை மேற்கொண்டார் என்ற குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள குருநாகல் மருத்துவர் சியாப்டீன் மொஹமட் சாபிக்கு எதிரான முறைப்பாடுகள் அதிகரித்து வருகின்றன.

நேற்று வரை 377 பேர் தாமும் இந்த சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டிருக்கலாமா? என்ற சந்தேகத்தை வெளியிட்டு தமது முறைப்பாட்டை செய்திருக்கின்றனர்.

குருநாகல் வைத்தியசாலையில் 99 முறைபாடுகள் நேற்று மாத்திரம் பதிவாகின.
தம்புள்ளையில் 42 முறைப்பாடுகள் பதிவாகின.

நாரம்மல, குளியாப்பிட்டிய, கொக்கரல்ல, வெல்லவ, மாவத்தகம, தம்புள்ளை உட்பட்ட பகுதிகளில் இருந்தே இந்த முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

கருத்து தெரிவிக்க