உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவை

பயண அறிவுறுத்தல் தளர்வு பட்டியலில் இத்தாலியும் இணைந்தது.

சீனா, இந்தியா, சுவிட்ஸர்லாந்து ஜெர்மன் என்ற நாடுகளின் பட்டியலில் இத்தாலியும் இலங்கைக்கான சுற்றுலா பயண அறிவுறுத்தலில் தளர்வுகளை அறிவித்துள்ளது.

எனினும் இலங்கைக்கு வரும் தமது பொதுமக்கள் உயரிய கவனத்துடன் செயற்படவேண்டும் என்று அந்த நாடு கோரியுள்ளது.

இலங்கையின் நிலைமை படிப்படியாக முன்னேற்றம் கண்டு வருகிறது.

எனினும் அவசரகால சட்டம் தொடர்ந்தும் அமுலில் உள்ளது.

இந்தநிலையில் இலங்கைக்கு வரும் முன்னர் தமது பொதுமக்கள் இலங்கையில் உள்ள இத்தாலிய தூதரகத்துடன் தொடர்புக்கொள்ளுமாறு அதில் கேட்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க