உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

இஸ்லாமிய தீவிரவாதத்தை ஒழிக்க நீண்ட கால திட்டம் அவசியம்- பாதுகாப்பு செயலாளர்

குருநாகலில் நேற்று சில தரப்புக்கள் பதற்றத்தை தோற்றுவிக்க முயன்றமை தொடர்பில் தமது தகவல் கிடைத்ததாக பாதுகாப்பு செயலாளர் ஷாந்த கோட்டேகொட தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பாக விசாரணை செய்யும் நாடாளுமன்ற தெரிவுககுழுவின்; முன்னால் அவர் இந்த தகவலை இன்று வெளியிட்டார்.

வெளியிடங்களில் இருந்து வந்த சிலர், அங்கு வந்திருந்தனர். இதில் அதிகாரம் மிக்க சிலரும் இருந்ததாக தகவல் கிடைத்தது.

இதனையடுத்து படையினரை பயன்படுத்தி நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
இதேவேளை சமூக ஊடகங்களே இன்று பதற்றங்களுக்கு காரணமாக உள்ளன என்றும் கோட்டேகொட தெரிவித்துள்ளார்.

இஸ்லாமிய தீவிரவாதத்தை ஒழிக்க நீண்ட கால திட்டம் அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்து தெரிவிக்க