உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

ஞானசாரின் கூற்று அடிப்படையற்ற பொய்- துருக்கிய தூதரகம்

நாட்டில் பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் துருக்கியின் நிதிகள் பயன்படுத்தப்படுவதாக பொதுபலசேனாவின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் சுமத்தியுள்ள குற்றச்சாட்டை துருக்கிய தூதரகம் மறுத்துள்ளது.

தொலைக்காட்சியில் தேரர் வெளியிட்ட கருத்து அடிப்படையற்றது என்று தூதரகம் குறிப்பிட்டுள்ளது.

துருக்கியின் 40மில்லியன் டொலர்கள் இலங்கைக்குள் வருகின்றன.

அவை நாட்டில் பதற்றநிலையை உருவாக்கவே பயன்படுத்தப்படுகின்றன என்று தேரர் குற்றம் சுமத்தியிருந்தார்.

எனினும் இந்தக்குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள துருக்கிய தூதரகம், இலங்கையின் பல்வேறு துறைகளுக்கு தாம் உதவுவதாக தெரிவித்துள்ளது.

இதற்கான நிதிகள் யாவும் வெளிப்படைத்தன்மையாகவே மேற்கொள்ளப்படுவதாக தூதரகம் குறிப்பிட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க