உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

ஜனாதிபதியின் தீர்மானத்துக்கு எதிராக தடைஉத்தரவை கோரும் காவல்துறை அதிபர்

ஜனாதிபதி, தம்மை பதவியி;ல் இருந்து இடைநிறுத்தியமைக்கு எதிராக இடைக்கால தடையைக்கோரி காவல்துறை மா அதிபர் பூஜித் ஜெயசுந்தர இன்று அடிப்படை உரிமை மீறல் மனுவை தாக்கல் செய்துள்ளார்.

ஜனாதிபதி தம்மை கட்டாய விடுமுறையில் அனுப்பியமை அடிப்படை உரிமைமீறல் என்று ஜெயசுந்தர தமது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

எனவே ஜனாதிபதியின் அந்த கட்டளையை ரத்துச்செய்யவேண்டும் என்று மனுதாரரான ஜெயசுந்தர கேட்டுள்ளார்.

மனுவில், பதில் காவல்துறை அதிபர், அரசமைப்பு சபையின் உறுப்பினர்கள், பிரதமர் மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

கருத்து தெரிவிக்க