புதியவைவிளையாட்டு செய்திகள்

பிரெஞ்ச் திறந்தநிலை டென்னிஸ் போட்டி முதல் சுற்று ஆட்டங்கள்

பிரெஞ்ச் திறந்தநிலை டென்னிஸ் போட்டியின் முதல் சுற்று ஆட்டங்களில் முன்னணி வீராங்கனைகள் நவோமி ஒசாகா, ஹாலெப் ஆகியோர் வெற்றி பெற்றனர்.

கிராண்ட்ஸ்லாம்’ போட்டிகளில் ஒன்றான பிரெஞ்ச் திறந்தநிலை போட்டி பாரீஸ் நகரில் நடந்து வருகிறது.

இதில் 3-வது நாளான நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 5-வது இடத்தில் உள்ள ஜெர்மனி வீரர் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் 7-6 (7-4), 6-3, 2-6, 6-7 (5-7), 6-3 என்ற செட் கணக்கில் ஆஸ்திரேலியாவின் ஜான் மில்மானை போராடி வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.

இந்த ஆட்டம் 4 மணி 8 நிமிடம் நீடித்தது.

மற்றொரு ஆட்டத்தில் உலக தரவரிசையில் 11-வது இடத்தில் இருக்கும் ரஷிய வீரர் கச்சனோவ் 6-1, 6-1, 6-4 என்ற நேர்செட்டில் ஜெர்மனியின் செட்ரிக் மார்செலை வெளியேற்றி 2-வது சுற்றுக்குள் நுழைந்தார்.

மற்ற ஆட்டங்களில் ஜூவான் மார்ட்டின் டெல்போட்ரோ (அர்ஜென்டினா), லூகாஸ் போலே (பிரான்ஸ்), பாபியோ போக்னினி (இத்தாலி), கைல் எட்முன்ட் (இங்கிலாந்து), பாவ்டிஸ்டா அகுட் (ஸ்பெயின்) உள்ளிட்டோரும் வெற்றி கண்டனர்.

கருத்து தெரிவிக்க