உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவைவெளிநாட்டு செய்திகள்

லட்சத்தீவு நிர்வாகம் பாதுகாப்பை பலப்படுத்தியது

இந்தியாவின் லட்சத்தீவுகள் நிர்வாகம் தமது நிர்வாகப்பகுதிகளில் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளது.

இலங்கையில் இருந்து ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் லட்சத்தீவுக்கு தப்பிச்சென்றுள்ளதாக வெளியான தகவலை அடுத்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

லட்சத்தீவின் நிர்வாகி பாரூக் கான் நேற்று பாதுகாப்பு தொடர்பில் படைகளின் அனைத்து பிரிவினருடன் கலந்துரையாடினார்.

இதன்போது தீவிரவாதிகளின் ஊடுருவல்களை தடுக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க முடிவெடுக்கப்பட்டது.

கருத்து தெரிவிக்க