உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்புதியவை

இரா.சம்பந்தன், கன்னியா வெந்நீரூற்றை பாதுகாக்க ஏன் முன்வரவில்லை?

இந்த அரசாங்கத்தை பாதுகாக்க போராடும், தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர் இரா.சம்பந்தன் ஏன் கன்னியா வெந்;நீரூற்றை பாதுகாக்க முன்வரவில்லை?

இந்த அரசாங்கத்தைப் பாதுகாப்பதற்;குப் போராடும், திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் ஏன் திருகோணமலை மாவட்டத்தில் அமைந்துள்ள கன்னியா வெந்நீரூற்றை பாதுகாக்க முன்வரவில்லை?என தமிழ் மக்கள் கூட்டணியின் திருகோணமலை மாவட்ட அமைப்பாளரும் திருகோணமலை நகராட்சி மன்ற முன்னாள் உறுப்பினருமான சிவசுப்பிரமணியம்  நந்தகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் செவ்வாய்க்கிழமை 28.05.2019 அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.

இந்த அரசாங்கத்தின் எதிர்காலம் தங்கள் கைகளில் உள்ளதாக கூறிக்கொள்ளும் இரா. சம்பந்தன்   இதிகாச புராண காலத்திற்கு அப்பாற்ப்பட்டதுமான வரலாற்றை  கொண்ட ஒரு பிரதேசத்தை, தொல்பொருள் திணைக்களம் தனது அதிகாரத்தை பயன்படுத்தி கபளீகரம் செய்ததை ஏன் தடுக்க முடியவில்லை.?

இதற்கான காரணத்தை தமிழ் மக்களுக்கு அவர் வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும்.

குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் தொல்பொருள் திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம், வனபரிபாலன திணைக்களம், கரையோர அபிவிருத்தி மற்றும் செயற்பாடுகளிற்கான திணைக்களம், வீடமைப்பு அதிகார சபை என்பன தமிழ் மக்களுக்கு எதிராகச் செயற்பட்டு வருகின்றன.

இந்த அரசாங்க நிறுவனங்கள் ஆலய நிலங்களை அபகரிப்பதும், தமிழ்மக்களிற்கு நன்மையளிக்க கூடிய அபிவிருத்தி திட்டங்களை கட்டிட நிர்மாணங்களை தடுப்பதும் கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்களின் இனப்பரம்பலை தடுக்குமுகமாக தமிழ் பிரதேசங்களில் ஊடறுத்து சிங்கள குடியேற்றங்கள் நிறுவுவதையும் நோக்கமாக கொண்டு செயற்பட்டு வருகின்றன.

இதற்கான ஆதாரங்கள் நிறையவே உண்டு. இவ்வாறு எதிர்காலத்தில் இந்நாட்டில் வாழும் குறித்த இன மக்களிற்கு எதிராக இந்த அரச நிறுவனங்கள் செயற்படுவதை நிறுத்த வேண்டும்.

கன்னியா வெந்நீரூற்று பிரதேசத்தில் தமிழ்மக்கள் இந்துக்கள் சுதந்திரமான முறையில் தமது காரியங்களையும் மத சடங்குகளையும் மேற்கொள்ள உள்ள தடைகள் அகற்றப்படுவதோடு கன்னியா வெந்நீரூற்று பிரதேசம் தொல்பொருள் ஆய்விற்கு உட்பட்டது என்ற தீர்மானம் இரத்துச் செய்யப்பட வேண்டும் என அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க