உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்புதியவை

பயண எச்சரிக்கையை இந்தியாவும் தளர்த்தியது

இலங்கையின் இயல்பு நிலைமை ஏற்பட்டுள்ளது என்ற அடிப்படையில் தமது பிரஜைகளுக்கான பயண அறிவுறுத்தல்களை இந்தியா தளர்த்தியுள்ளது.

இந்தநிலையில் இலங்கைக்கு பயணம் செய்யும் இந்தியர்கள், கவனமாக செயற்படவேண்டும் என்று இந்திய அரசாங்கம் கோரியுள்ளது.

இலங்கையின் பாதுகாப்பு நிலை படிப்படியாக வழமைக்கு திரும்புகிறது

இந்தநிலையில் இலங்கைக்கு செல்லும் இந்திய பிரஜைகள் அங்கிருக்கும் இந்திய உயர்ஸ்தானிகரகத்துடன் எந்த நேரத்திலும் தொடர்புகளை ஏற்படுத்தலாம் என்றும் இந்திய அரசாங்கம் பரிந்துரை செய்துள்ளது.

கருத்து தெரிவிக்க