உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

ஐஎஸ்ஐஎஸ்: இந்திய தேசிய விசாரணைக்குழு இலங்கை வருகிறது

இந்தியாவின் தேசிய விசாரணை முகவரகத்தின் குழு ஒன்று இலங்கை வரவுள்ளது.
இலங்கையின் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளுக்கும் கேரளாவின் உள்ளவர்களுக்கும் இடையிலான தொடர்புகள் தொடர்பில் ஆராய்வதற்காகவே இந்த குழு இலங்கை வரவுள்ளது.

இந்தக்குழுவுக்கு அந்த முகவரகத்தின் பணிப்பாளர் நாயகம் வைசி மோடி தலைமை தாங்கவுள்ளார்.

ஏற்கனவே இலங்கையுடன் தொடர்புக்கொண்டவர்கள் என்று சந்தேகிக்கப்படும் ரியாஸ் என்ற ரியாஸ் அபூபக்கர் கைதுசெய்யப்பட்டார்.

இவர் இலங்கையின் ஐஎஸ் தலைவராக செயற்பட்டவர் என்று கருதப்படும் ஸஹ்ரான் ஹாசிமை பின்பற்றுபவர் என்பதை விசாரணைகளின்போது ஏற்றுக்கொண்டுள்ளார்.

இந்தநிலையில் கேரளாவில் தற்கொலை தாக்குதல்களை நடத்த திட்டங்கள் உள்ளமையையும் அவர் ஏற்றுக்கொண்டுள்ளார்.

அத்துடன் ஸஹரான் ஹாசிமை பின்பற்றும் பல இளைஞர்கள் இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் உள்ளதாகவும் அபூபக்கர் தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க