உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

வைத்திய நிர்வாகப் பிரிவினருக்கு ஒரு எச்சரிக்கை!

சுகாதார, போஷாக்கு மற்றும் உள்நாட்டு சுகாதார அமைச்சின் கீழ் உள்ள வைத்தியசாலைகள் மற்றும் ஏனைய பிரிவுகளைச் சேர்ந்த வைத்திய நிர்வாகத்தினருக்கு தொழில்நுட்ப விடயங்களைத் தவிர்ந்த ஏனைய விடங்கள் தொடர்பில் பிரசித்தமாக கருத்துக்களை வெளியிடுவதற்கு அமைச்சின் செயலாளரின் அனுமதி பெறவேண்டுமென பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் லால் பனாபிட்டிய தெரிவித்துள்ளார்.
விசேடமாக வைத்திய நிர்வாகப் பிரிவினர் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையில் அமைச்சின் செயலாளரிடம் அனுமதிபெறவேண்டியது அவசியம் எனவும் பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
இந்த தீர்மானம் தொடர்பில் அனைத்து வைத்திய நிர்வாகத்தினரையும் அறிவுறுத்தியுள்ளதாகவும் அதனை மீறி செயற்படும் வைத்திய நிர்வாகப் பிரிவினருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் லால் பனாபிட்டிய தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க