உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவை

முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை: அரசியல்வாதி தப்பியோட்டம்

புத்தளம் நாத்தாண்டியா பகுதியில் முஸ்லிம்களுக்கு எதிராக அண்மையில் இடம்பெற்ற வன்முறைகள் தொடர்புடைய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் வெளிநாட்டுக்கு தப்பிச்சென்றுள்ளார்.

இதற்காக அவர் விடுமுறைக்கடிதம் ஒன்றை பிரதேசசபைக்கு வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர் ஐரோப்பிய நாடு ஒன்றுக்கே சென்றுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்தநிலையில் அவரை கைதுசெய்ய பிடியாணை உத்தரவைப் பெறவுள்ளதாக காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.

கருத்து தெரிவிக்க