உள்நாட்டு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்வடக்கு செய்திகள்

முல்லைத்தீவில் வறட்சியால் 12 ஆயிரத்திற்கு மேற்பட்ட குடும்பங்கள் பாதிப்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தில்  கடும் வறட்சி காரணமாக 12 ஆயிரத்து 766 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த காலத்தில் ஏற்பட்டுள்ள கடும் வெப்பம் காரணமாக மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
பல விவசாய செய்கைகள் அழிவடைந்துள்ளன குடிநீருக்கான தட்டுபாடு ஏற்பட்டுள்ளது.
அதன் படி புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் ஆயிரத்து 967 குடும்பங்களை சேர்ந்த 6ஆயிரத்து 296 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
கரைத்துறைப்பற்று பிரதேசத்தில் 10ஆயிரத்து 799 குடும்பங்களை சேர்ந்த 33 ஆயிரத்தி 797 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக பதிவாகியுள்ளது.
இந்த பிரதேசங்களில் தேசிய அனர்த்த முகாமைத்து மத்திய நிலையத்தினரால் குடிநீர் தட்டுப்பாடான இடங்களுக்கு குடிநீர் விநியோகம் மேற்கொள்ளப்படுவதாக மாவட்ட அனர்த்த முகாமைத்து நிலையத்தினர் தெரிவித்துள்ளார்கள்.

கருத்து தெரிவிக்க