உள்நாட்டு செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

அளம்பில் பகுதியில் கைக்குண்டு மீட்பு!

முல்லைத்தீவு அளம்பில் பகுதியில் பனை வடலியில் வைக்கப்பட்ட கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் பற்றி தெரியவருகையில் அளம்பில் பகுதி வீதியில் பனை வடலி மட்டையில் வைக்கப்பட்டிருந்த நிலையிலான கைக்குண்டு ஒன்று இனம் காணப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவு பொலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து முல்லைத்தீவு பொலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டுள்ளதுடன் அதனை நீதிமன்ற உத்தரவிற்கு அமைய சிறப்பு அதிரடிப்படையினரை கொண்டு அகற்றியுள்ளார்கள்.

கருத்து தெரிவிக்க