உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

அமரிக்காவுடன் உடன்படிக்கை: தமது அனுமதி பெறப்படவேண்டும்- ஜனாதிபதி

அமரிக்காவுடன் செய்துக்கொள்ளப்படும் எந்த உடன்படிக்கைகள் தொடர்பிலும் தமது அனுமதி பெறப்படவேண்டும் என்று ஜனாதிபதி ஐக்கிய தேசிய முன்னணியிடம் தெரிவித்துள்ளார்.

சீனாவுக்கு சென்று வந்ததன் பின்னரே இந்த பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

சோபா(SOFA எனப்படும் உடன்படிக்கை தொடர்பிலேயே இந்த பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த உடன்படிக்கையின்கீழ் அமரிக்கா,இலங்கைக்கான இராணுவ உதவிகளை அதிகரிக்கும் வாய்ப்பு ஏற்படும்.

முன்னதாக இந்த உடன்படிக்கையை செய்துக்கொள்ள அரசாங்கம் முனைப்புக்காட்டியபோதும் பின்னர் அதில் சில திருத்தங்களை மேற்கொள்ளவேண்டியிருந்ததன் காரணமாக அது தாமதிக்கப்பட்டுள்ளது.

இந்த திருத்தங்கள் தொடர்பில் வெளியுறவு அமைச்சர் திலக் மாரப்பன அமரிக்காவுடன் பேச்சுக்களை நடத்தி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க