உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவை

முஸ்லிம் பெண்களின் ஆடைகள்:சிங்களவர்கள் ஆலோசனைப் பெறதேவையில்லை.

முஸ்லிம் பெண்களின் புர்ஹா ஆடைகளை தடைசெய்வதற்கு சிங்களவர்கள், முஸ்லிம்களிடம் கோரிக்கை விடுக்கவேண்டிய அவசியம் இல்லை என்று பொதுபலசேனாவின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

இலங்கை சிங்களவர்களுடைய நாடு. இங்கு ஆடைகளை அணிவது தொடர்பில் ஒழுங்குகள் உள்ளன.

இந்தநிலையில் மற்றவர்களின் ஆலோசனைகளை கேட்டு அவற்றை நடைமுறைப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இலங்கையில் இஸ்லாமிய தீவிரவாத அச்சுறுத்தல் தொடர்பில் ஐக்கிய நாடுகளிடம் முறையிடவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க