உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவை

கொழும்பின் புறநகர் பகுதிகளில் சோதனை நடவடிக்கைகள்

கொழும்பில் புறநகர் பகுதிகளில் நேற்று பாரிய சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

உயிர்த்த ஞாயிறுத்தாக்குதல் தொடர்பிலான சந்தேகத்துக்குரியவர்களை கைதுசெய்யும் நடவடிக்கையாகவே இது அமைந்திருந்தது.

எனினும் இதன்போது எத்தனை பேர் கைது செய்யப்பட்டனர் என்ற தகவல் வெளியாகவில்லை.
உயிர்;த்த ஞாயிறுத் தாக்குதல்களின் பின்னர் சந்தேகத்தின்பேரில் பலர் இதுவரை கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

அவர்களிடம் தொடர்ந்தும் விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்தநிலையில் இலங்கையில் இருந்து 15ஐஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் கேரளாவை நோக்கிச்சென்றுள்ளதாக கேரளாவின் புலனாய்வுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளதாக செய்திகள் வெளியானமையும் குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க