உள்நாட்டு செய்திகள்

கல்விக்கட்டமைப்புக்குள்ளும் ஊடுருவிய சஹ்ரான் குழு – மூன்று ஆசிரியர்கள் கைது!

தற்கொலை குண்டுதாரியான சஹ்ரானின் மேலும் ஐந்து ஆதரவாளர்கள் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஹொரவபொத்தான, கிவுலேகட மற்றும் எல்லேவெவ ஆகிய பகுதிகளில் வைத்தே அதிபர் ஒருவர், இரண்டு ஆசிரியர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்களென மொத்தமாக ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள், சஹ்ரானின் பிரசார நடவடிக்கைகளுக்கு உதவியுள்ளனர் என ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பின் சந்தேகநபர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் பிரகாரமே இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கருத்து தெரிவிக்க