உள்நாட்டு செய்திகள்

ரணிலின் வலைக்குள் சிக்காதீர்! தம்மிக்க பெரேராவுக்கு மஹிந்த அணி ஆலோசனை

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் குள்ள நரி அரசியல் வலைக்குள் சிக்கவேண்டாமென பிரபல வர்த்தகரான தம்மிக்க பெரேராவிடம் கூட்டு எதிரணி கோரிக்கை விடுத்துள்ளது.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே கூட்டு எதிரணி நாடாளுமன்ற உறுப்பினரான கனக்க ஹேரத் மேற்படி கோரிக்கையை விடுத்தார்.

” ஜனாதிபதித் தேர்தலுக்குரிய அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. இருந்தும் பொதுவேட்பாளரை தேடி ஐக்கிய தேசியக்கட்சி தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன.

வழமையாக இறுதிநேரத்திலேயே பொதுவேட்பாளரை களமிறக்கும் தந்திரத்தை ரணில் கையாள்வார். ஆனால், இம்முறை முன்கூட்டியே நடவடிக்கையில் இறங்கியுள்ளார். தேர்தல் முடிவு என்னவென்பது அவருக்கு தெரிந்திருக்கும். எனவே, பிரதமரால் வழங்கப்படும் கயிற்றை விழுங்க வேண்டாமென தம்மிக்க பெரேராவிடம் கேட்டுக்கொள்கின்றோம்.” என்றும் கூறினார் கனக்க ஹேரத்.

கருத்து தெரிவிக்க