உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்முக்கிய செய்திகள்

இனி போராட மாட்டேன் – ஞானசார தேரர் அறிவிப்பு

” நான் அன்று கூறியவை இன்று உண்மையாகிவிட்டன. நாட்டுக்காகவும், பௌத்த சாசனத்துக்காகவும் குரல் கொடுத்ததால் பல்வேறு பிரச்சினைகளை சந்திக்க நேரிட்டது. இறுதியில் சிறையிலும் அடைக்கப்பட்டேன்.” என்று பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலார் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார்.

ஜனாதிபதி பொதுமன்னிப்பின்கீழ் விடுதலைப்பெற்று சிறைச்சாலையிலிருந்து வெளியேறிய பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

” நீண்டகாலம் போராடினேன். தற்போது களைத்துவிட்டேன். எனவே, இனியும் போராடும் மனநிலை இல்லை. எஞ்சியுள்ள காலப்பகுதியை பௌத்த சாசனத்துக்காக அர்ப்பணிப்பேன். முழுமையானதொரு துறவு வாழ்க்கையை வாழ்வேன். இதற்கு மேல் எதையும் கூறவிரும்பவில்லை.” என்றும் ஞானசார தேரர் குறிப்பிட்டார்.

 

 

 

கருத்து தெரிவிக்க