உள்நாட்டு செய்திகள்முக்கிய செய்திகள்

ரிஷாட்டுக்கு எதிரான பிரேரணை – நாளை திகதி நிர்ணயம்!

அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படும் திகதி நாளை (22) அறிவிக்கப்படும் என்று சபாநாயகர் கருஜயசூரிய இன்று தெரிவித்தார்.

இதற்காக  நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் பங்கேற்கும் கூட்டம் நாளை காலை நடைபெறவுள்ளது என்றும் அவர் கூறினார்.

இன்றைய சபை அமர்வுகளை தற்காலிகமாக இடைநிறுத்தியேனும், கட்சித் தலைவர்கள் கூட்டத்தை நடத்தி திகதியை அறிவிக்குமாறு கூட்டு எதிரணி விடுத்த கோரிக்கையை சபாநாயகர் நிராகரித்தார்.

நாடாளுமன்றம் நாளை முற்பகல் 10.30 மணிக்கு சபாநாயகர் கருஜயசூரிய தலைமையில் கூடவுள்ளது.

 

 

 

 

கருத்து தெரிவிக்க