விளையாட்டு

மீண்டும் பயிற்சிக் களத்தில் இறங்கிய இலங்கை கிரிக்கெட் வீரர்கள்!

இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள் நேற்றைய தினத்திலிருந்து பயிற்சிகளில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இரண்டு மாதங்களுக்கு அதிகமாக கொரோனா தொற்றின் அச்சுறுத்தலினால் பயிற்சிகள் இடைநிறுத்தம் செய்யப்பட்டிருந்தது. அந்த வகையில் நேற்று பயிற்சிகள் ஆரம்பிக்கப்பட்டபோது அதிக வெப்பமான காலநிலை இருந்துள்ளதால் அணித் தலைவர் திமுத் கருணாரத்ன மயக்கமடைந்து விழுந்துள்ளார். அதனையடுத்துஅவர் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க