நாடாளுமன்றத்தின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று சபாநாயகர் கருஜயசூரிய தெரிவித்தார்.
நாடாளுமன்றம் இன்று பிற்பகல் ஒரு மணிக்கு சபாநாயகர் கருஜயசூரிய தலைமையில் கூடியது. இதன்போது, 21/4 தாக்குதலுடன் நாடாளுமன்ற ஊழியர்கள் சிலரும் தொடர்புபட்டுள்ளனர் என வெளியாகியுள்ள தகவல்கள் தொடர்பில் கூட்டு எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேள்விகளை எழுப்பினர்.
இவற்றுக்கு பதிலளித்த சபாநாயகர், ” நாடாளுமன்ற அமர்வு ஆரம்பமாவதற்கு முன்னர் பாதுகாப்பு தரப்பினரும், புலனாய்வு அதிகாரிகளும் அறிக்கைகளை சமர்ப்பிப்பார்கள். இதன்படி எவ்வித அச்சுறுத்தலும் இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், குண்டு செயலிழக்கும் பிரிவினரும் தேடுதல் நடத்தினர். சந்தேகத்துக்கிடமாக எதுவும் இருக்கவில்லை. வழமையைவிட நாடாளுமன்ற வளாகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.” என்று குறிப்பிட்டார்.
கருத்து தெரிவிக்க