கிழக்கு செய்திகள்

‘ தமிழர்களின் கல்வியை அழிக்காதே’ – ஹிஸ்புல்லாவுக்கு எதிராக போராட்டம்

” அழிக்காதே, அழிக்காதே, தமிழர்களின் கல்வியை அழிக்காதே…!” என்று கோஷமெழுப்பியவாறு கிழக்கு மாகாண ஆளுநருக்கு எதிராக மட்டக்களப்பில் இன்று போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

முற்போக்கு தமிழர் அமைப்பின் ஏற்பாட்டில், மட்டக்களப்பு –  காந்தி பூங்காவுக்கு முன்பாக நடைபெற்ற குறித்த கவனயீர்ப்புப் போராட்டத்தில் பல்கலைக்கழக மாணவர்களும் பங்கேற்றிருந்தனர்.

‘பேச்சில் நல்லிணக்கம்’, ‘செயலில் இனவாதம்’, ‘வேலையற்ற பட்டதாரிகளை ஆசிரியர்களாக நியமி’, ‘தமிழர்களின் கல்வியை புறந்தள்ளும் கிழக்கு ஆளுனர்’ போன்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாகைகளை  ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏந்தியிருந்தனர்.

எஸ். வியாழேந்திரனே முற்போக்கு தமிழர் அமைப்பின் தலைமை பதவியை வகிக்கின்றார்.

கருத்து தெரிவிக்க