முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் லண்டன் உட்பட்ட வெளிநாடுகளின் பல இடங்களில் இடம்பெற்றுள்ளன.
இதன்போது புலம்பெயர்ந்த தமிழர்கள் சுடரேற்றி தமது வணக்கத்தை வெளியிட்டனர்.
லண்டனில் இடம்பெற்ற நிகழ்வின்போது இனப்படுகொலைகளுக்கு நீதிவேண்டும் என்ற கோசம் எழுப்பப்பட்டது.
சுமார் 60 தமிழர் அமைப்புக்கள் இந்த நிகழ்வில் பங்கேற்றன.
இந்தநிலையில் ஈழத்தமிழரின் சுயநிர்ணய உரிமையை பாதுகாக்கவேண்டும் என்ற பிரகடனமும் வெளியிடப்பட்டது.
கருத்து தெரிவிக்க