உள்நாட்டு செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

ஆனையிறவில் துப்பாக்கி ரவைகளுடன் இருவர் கைது

கிளிநொச்சி ஆனையிறவு சோதனை சாவடியில் வைத்து இருவர் கைதுசெய்யப்பட்டனர்.

இவர்களிடம் இருந்து துப்பாக்கிகளுக்கான இரண்டு ரவைகள் மீட்கப்பட்டுள்ளன.

இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.

பயணிகள் பேருந்து ஒன்றை காவல்துறையினரும் படையினரும் சோதனையிட்டபோதே இந்த இருவரும் கைதுசெய்யப்பட்டனர்.

கைதுசெய்யப்பட்ட இருவரும் பின்னர் விசாரணைக்காக பளை காவல்துறையில் கையளிக்கப்பட்டனர்.

அவர்கள் தொடர்பான தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.

கருத்து தெரிவிக்க