இதழ்கள்உள்நாட்டு செய்திகள்முக்கிய செய்திகள்

18 ஆம் திகதி ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு?

வெசாக் பூரணை தினத்தை முன்னிட்டு ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் அடிப்படையில், 762  கைதிகளை விடுதலை செய்வதற்கான நிகழ்வு வெலிக்கடை சிறைச்சாலை மைதானத்தில் எதிர்வரும் 18 ஆம் திகதி காலை 10 மணிக்கு இடம்பெறவுள்ளது என நீதி அமைச்சு தெரிவித்துள்ளது.

736 ஆண் கைதிகளும் 26 பெண் கைதிகளுமே இவ்வாறு விடுதலை செய்யப்படவுள்ளனர்.

அதேவேளை, சிறை வைக்கப்பட்டுள்ள பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்கி அவரை விடுதலை செய்யுமாறு பல தரப்பினரும் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்தனர்.

எனவே, அவரும் விடுதலை செய்யப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. எனினும், இது தொடர்பில் இன்னும் உத்தியோகப்பூர்வ தகவல்கள் வெளியாகவில்லை.

 

கருத்து தெரிவிக்க