இதழ்கள்உள்நாட்டு செய்திகள்

நாடு திரும்பிய கையோடு மைத்திரியின் அரசியல் ஆட்டம் ஆரம்பம்

சீனாவுக்கு பயணம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று அதிகாலை நாடு திரும்பினார்.

சீன தலைநகரான பீஜிங்கில் நடைபெற்ற ஆசிய நாகரீகங்கள் தொடர்பான மாநாட்டில் கலந்துகொள்வதற்காக மூன்று நாட்கள் பயணமாக கடந்த 13 ஆம் திகதி ஜனாதிபதி சீனா சென்றிருந்தார்.

அந்நாட்டின் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரையும் சந்தித்து பேச்சு நடத்தியதுடன், உடன்படிக்கைகளிலும் கைச்சாத்திட்டார். இந்நிலையிலேயே இன்று கொழும்பு வந்தடைந்தார்.

நாடு திரும்பிய கையோடு ஜனாதிபதி முக்கிய சில கலந்துரையாடல்களில் ஈடுபடவுள்ளார். ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஜனாதிபதியை சந்தித்து சமகால விவகாரங்கள் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர். அத்துடன், முஸ்லிம் கட்சிகளின் தலைவர்களும் ஜனாதிபதியை சந்திக்கவுள்ளனர்.

கருத்து தெரிவிக்க