நேற்று (ஓகஸ்ட் 01) காலி பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் படி காலி துறைமுக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உடுகம பிரதேசத்திலுள்ள தற்காலிக தங்குமிடத்தை சோதனையிட்ட போது அங்கு இணையம் ஊடாக குற்றச் செயல்களில் ஈடுபட்ட சீன பிரஜைகள் உட்பட 8 பேரை காலி பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த சந்தேகநபர்களிடமிருந்து 09 கணனிகள்,73 கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் பெருந்தொகை சிம் கார்டுகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கருத்து தெரிவிக்க