புதியவைவெளிநாட்டு செய்திகள்

பங்களாதேஷில் இதுவரை 18 பேர் உயிரிழப்பு!

பங்களாதேஷில் பல்கலைக்கழக மாணவர்களால் ஆரம்பிக்கப்பட்ட எதிர்ப்பு இயக்கம் காரணமாக இதுவரையில் 18 பேர் உயிரிழந்துள்ளதாகவும் ஆயிரக்கணக்கானோர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன்,
ரயில்கள், மெட்ரோ மற்றும் இணையமும் பாதிக்கப்பட்டதுடன், ஒரு தொலைக்காட்சி நிலையத்திற்கு தீ வைத்து எரிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில்,பங்களாதேஷில் நிலவி வரும் கலவரச்சூழலில் அங்கு வசிக்கும் இந்தியர்கள் மற்றும் வெளியில் செல்வதை குறைத்துக் கொள்ளுமாறும் இந்தியா எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க