இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் முன் அமைதியின்மை

வெளிநாட்டு  கடவுச்சீட்டு விண்ணப்பதாரர்களின் வசதிக்காக இன்று (19) முதல் புதிய முறைமையின் மூலம் கடவுச்சீட்டு விண்ணப்பம் வழங்கப்படுமென குடிவரவு குடியகல்வு திணைக்களம் கடந்த 17ம் திகதி அறிவித்திருந்தது.

அதன்படி ஒரு விண்ணப்பதாரர் புதிய வெளிநாட்டு கடவுச்சீட்டைப் பெற அல்லது புதுப்பிக்க www.immigration.gov.lk இணையத்தளத்தின் மூலம் பிரவேசித்து
கடவுச்சீட்டுக்களை பெறுவதற்கான திகதி மற்றும் நேரத்தை ஒதுக்கி பதிவு செய்திருக்க வேண்டுமென குறிப்பிடப்பட்டிருந்தது.

அதற்கிணங்க
இன்று காலை பத்தரமுல்லையில் உள்ள குடிவரவு குடியகல்வு திணைக்கள அலுவலகத்திற்கு வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை பெற்றுக் கொள்வதற்காக வந்திருந்த மக்களுக்கு
குறிப்பிட்ட திகதி மற்றும் நேரத்தில் வந்தவர்களுக்கு மட்டுமே வாய்ப்பு வழங்கப்படுமென அறிவிக்கப்பட்டதால் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக குடிவரவு குடியகல்வு திணைக்களத்திற்கு முன்பாக நீண்ட வரிசைகளும் நெரிசலும் காணப்பட்டதுடன் பொலிஸாருக்கும் கலகத் தடுப்புப்பிரிவினருக்கும் குறித்த இடத்திற்கு வரவழைக்கப்பட்டுள்ளனராக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க