உலகம்புதியவைவெளிநாட்டு செய்திகள்

ஈரான் ஜனாதிபதி தேர்தலில் மசூத் பெசெஸ்கியன் வெற்றி

ஈரான் நாட்டில் ஜனாதிபதியை தேர்ந்தெடுக்க கடந்த 28ஆம் திகதி தேர்தல் நடைபெற்ற நிலையில் நாடு முழுவதும் 40 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ள நிலையில் அதிகபட்சமாக முன்னாள் நிதி அமைச்சர் மசூத் பெசெஸ்கியன் 42.5 சதவீத வாக்குகள் பெற்றுள்ள தோடு சயீது ஜலீலி 38.6 சதவீத வாக்குகளை பெற்றனர்.

இந்நிலையில் இரண்டு வாக்காளர்களும் 50 வீத வாக்குகளை பெறவிட்டால் இரண்டாம் சுற்று தேர்தல் இடம்பெறும் என அறிவித்த நிலையில் இன்று வேட்பாளர்கள் மசூத் பெசெஸ்கியன் மற்றும் சயீது ஜலீலி ஆகிய இருவருக்கும் இடையிலான இரண்டாம் சுற்று தேர்தல் நடைபெற்றிருந்தது.

அதற்கிணங்க இரண்டாம் கட்ட வாக்கெடுப்பில் வாக்குப்பதிவுகள் நிறைவடைந்து வாக்குகள் எண்ணும் பணி ஆரம்பிக்கப்பட்டன.
அதன்படி எண்ணபப்பட்ட 03 கோடி வாக்குகளில் 1.7 கோடி வாக்குகளைப்பெற்று மசூத் பெஸ்கியன்
வெற்றிப்பெற்றுள்ளதாக
ஈரான் உள்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

கருத்து தெரிவிக்க