புதியவைவெளிநாட்டு செய்திகள்

சவுதி அரேபிய விடுத்துள்ள அறிவுறுத்தல்!

இஸ்ரேல் மற்றும் காசா போர் கடந்த 8 மாதங்களுக்கும் மேலாக தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் காசாவுக்கு ஆதரவாக லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா கிளர்ச்சியாளர்கள் இஸ்ரேல் எல்லைப்பகுதிகளில் அடிக்கடி தாக்குதலில் ஈடுபடுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதனால், லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா கிளர்ச்சியாளர்களையும் முழுமையாக ஒழிக்க இஸ்ரேல் உறுதியளித்துள்ளது. அதன்படி, அங்கு போர்பதற்றம் நிலவுவதாகவும் லெபனானில் வசிக்கும் சவுதி நாட்டின் குடிமக்கள் அனைவரும் உடனடியாக வெளியேறும்படி சவுதி அரேபியா அறிவுறுத்தியுள்ளது.

கருத்து தெரிவிக்க