இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

கொழும்பில் நீர்வெட்டு

அம்பத்தளை நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் அத்தியாவசிய புனரமைப்பு பணிகள் காரணமாக இன்று (ஜூன் 29) கொழும்பு உள்ளிட்ட பிரதேசங்களில் நீர் விநியோகம் தடைப்படுமென தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

அதற்கிணங்க இன்று காலை 9 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை 15 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு,தெஹிவளை, கோட்டை, கடுவெல, மஹரகம, பொரலஸ்கமுவ, கொலன்னாவ மாநகர சபைப்பகுதிகளுக்கும் கொட்டிகாவத்தை, முல்லேரியா ஆகிய பிரதேச சபை பகுதிகளுக்கும் இந்நீர்விநியோக தடை அமுல்படுத்தப்பட்டுள்ளதென தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

கருத்து தெரிவிக்க